Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Thiruvaleeswarar Temple ,Nerumbur, Thirukalukundram

திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - நெரும்பூர்


Arulmigu Thiruvaleeswarar Temple ,Nerumbur, Thirukalukundram!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ChengalpattuDistrict_ ThiruvaleeswararTemple_nerumbur-Thirukalukundram_shivanTemple


அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - நெரும்பூர்

கோவில் அமைப்பு

திருவாலீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எதிரே நந்தி மண்டபமும், சுற்றுப்பிரகார சுவரில் மேற்கே விஷ்ணு பகவானும், வடக்கே பிரம்மா, துர்கை தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையின் வெளியே அர்த்த மண்டபத்தில் உள்ளும் வெளிப்பகுதகளிலும் கருங்கற்கலால் அழகிய கலை நயம்மிக்க சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடக்கு பகுதியில் சண்டிகேசுவரருக்கு சிறிய மண்டபமும், அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களில் மூன்று தூண்கள் ஒரே மாதிரியாகவும,; மற்றொரு தூண் வேறு வடிவத்திலும் உள்ளது. இத்தூண் போரில் வென்றதற்கான அடையாள nஐயஸ்தம்பமாக உள்ளது. மன்னர்கள் போரில் வென்ற நாட்டில் கோவில்கள் அமைத்தும் திருப்பணிகள் செய்தும் தங்களின் அடையாள சின்னமாக nஐயஸ்தம்பத்தை (தூண்) அமைத்தனர். கோவிலுக்கு நுழைவு வாயிலாக இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி சுற்றுப்பிரகார சுவரும் அக்காலத்தில் இருந்ததற்கான அடி பீடம் காணப்படுகிறது. அபிஷேகம் செய்வதற்கு கோவிலின் எதிரே வடகிழக்கே சிறிய உறை கிணறு, கோவில் பின்புறம் குளம் உள்ளது.

கோவிலின் சிறப்பு

நாகராஜா சுவாமிக்கு தோஷம் ஏற்பட்டபோது உத்திராயண காலத்தில் சூரிய உதய நேரத்தில் சிவனை சுற்றி வந்து சந்திரனையும,; சூரியனையும் ஒரே நேரத்தில் பூஜை செய்து தோஷம் நீங்கியதாக ஐதீகம். பங்குனி உத்திர திருக்கல்யாணத்தன்று இறைவனை வழிபட்டு மஞ்சள் தாலி எடுத்துகொடுத்தால் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதோஷம், சித்திரை பௌர்ணமி, பங்குனி உத்திரம,; மார்கழியில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. தற்போது கோவிலில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது

திருக்கோயில் முகவரி :

திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் -
நெரும்பூர்
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



அமைவிடம்:

.